லோக்பால் அமைப்பின் முதல் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்!

  • லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
  • பினாகி சந்திர கோஸ் பதவிப் பிரமாணத்தை இன்று குடியரசுத் தலைவர் செய்து வைத்தார்

அரசு அதிகாரிகள் மற்றும் பொது அதிகாரிகளின் ஊழல் குற்றங்களை உடனடியாக விசாரித்து தண்டனை வழங்கும் லோக்பால் அமைப்பின் சட்டம் கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்டு தற்போது வரை இந்த அமைப்பு செயல்படாமல் இருந்தது.

இந்நிலையில் அந்த அமைப்பிற்கு தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் பிரதீப் குமார், அபிலாஷா குமாரி, அஜய் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
Srimahath

Leave a Comment