இனி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபான கடைதிறப்பு.. டெல்லி அரசு.!

டெல்லி அரசு மதுபானக் கடைகளை திறப்பதற்கான நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும் உதவும் என்று ஒரு அதிகாரி கூறினார். கொரோனா வைரஸ் கட்டாயமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பு, டெல்லியில் உள்ள மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்தே இருக்கும்.

ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்னர் மே மாதத்தில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டபோது ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டு காலை 10மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், கலால் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி,  காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பதிலாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 863 மதுபானக் கடைகளில், 475 கடைகளை டெல்லி  அரசு நடத்துகின்றன. சுமார் 389 மதுபான கடைகள் தனியாருக்கு சொந்தமானவை என கூறப்படுகிறது.

author avatar
murugan