சௌதி அரேபியா எண்ணெய் வயல்கள் மீது இரான் தாக்குதல் ! ஆதாரத்துடன் நிரூபித்த சௌதி !

சௌதி அரேபியாவில் எண்ணெய் வயல்களை இரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை வைத்து தாக்கியுள்ளதாக சௌதி அரேபியா இரான் மீது குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதலை சௌதி அரேபியாவிற்கு ஆதரவு அளிக்கும் ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானத்தை வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தார்கள் . ஆனால் இதில் இரானின் பங்கு இருப்பதாகவும் சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

மேலும் சௌதி அரேபியா எந்த இடத்தில் தாக்குதல் நடத்த பட்டது என்ற தகவலை தர முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசன் முகமது பின் சல்மானை சந்திக்க அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பம்பியோ சௌதி அரபியாவிற்கு வருகை தந்தார்.

இரானின் தெற்கு பகுதியில் அமைந்திற்கும் பாரசீக வளைகுடாவின் வடக்கு பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடத்த பட்டதாக ஒரு  அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.