சக பெண் அதிகாரியின்மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி.!

  • டிசம்பர் 31-ம் தேதி புகார் கொடுக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டில்  நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் சக பெண் அதிகாரி தனது மகளுடன் கலந்து கொண்டார்.
  • அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால் குற்றவாளிகளுக்கு  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஐதராபாத்தில்  பாலியல் வன்கொடுமை செய்து மருத்துவர் பிரியங்காவை எரித்து கொன்றவர்களை போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சக பெண் அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி புகார் கொடுக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டில்  நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் சக பெண் அதிகாரி தனது மகளுடன் கலந்து கொண்டார்.அந்த நிகச்சியில் அங்கு உள்ள ஒரு அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த அதிகாரியின் பெயரை வெளியிடவில்லை.

பின்னர் சிறுமியின் தாய், தனது மகளுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். இதை தொடர்ந்து போக்சோ மற்றும் 354-வது பிரிவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய உயர்அதிகாரிகள்  கடந்த 3-ம் தேதி அந்த ஐ.பி.எஸ் அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

 

author avatar
murugan