INDvsAUS:டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு..!

  • இன்று இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
  • இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்கான ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள்  இந்தியா வந்துள்ளனர். இன்று முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன் ), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இலங்கை அணியுடன் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது  என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan