குல்பூஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – இந்திய வலியுறுத்தல்!

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்புஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை உளவு பார்த்தாக கூறி 2016 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கப்பற்படை அதிகாரியான குல்பூஷண ஜாதவை தூக்கிலிட முடிவு செய்தது. இந்த முடிவை நிறுத்தி வைப்பதாக சர்வதேச நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் குல்பூஷணை இந்தியா கொண்டு வர தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் இந்தியா வரவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.