மும்பையில் பலத்த மழை! வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது!

மும்பையில் பலத்த மழை காரணமாக வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.

மும்பையில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மும்பையில், நேற்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்தது. விடாமல் தொடர்ந்து பெய்த மழையால் மும்பையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழைக்காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும், மும்பையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.