நீலகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரியில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கும் கடந்த 5 நாட்களாலாகி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு பெய்து வரும் கனமழையால், பில்லூர் அணையின் முழுகொள்ளளவான 100 அடியில் இருந்து, 95 அடி வரை நீர் நிரம்பியுள்ளது. இதனையடுத்து பில்லூர் அணையை சுற்றியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.