பொங்கலன்றும் போராடும் விவசாயிகள்..!!!கண்டுகொள்ளாத அரசு..!!

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பொங்கல் அன்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து பொங்கல் பானையை சுக்கு நூறாக உடைத்து போராட்டம் நடத்தி தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசு விவசாயிகளுக்கு கரும்புக்காக ரூ 30 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.தமிழகவே விவசாயிகளை எண்ணி பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில் விவசாயிகள் போராட்டமானதும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசை நினைத்து வேதனை கொள்கின்றனர்.

author avatar
kavitha

Leave a Comment