டிராக்டர் ஏற்றி பயிர்களை அழித்த விவசாயி!வேதனை கண்ணீர்

உபியில் வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு போதிய விலை கிடைக்காததால் பயிரிட்டிருந்த நெற்பயிர்களை அழித்த விவசாயின்  வேதனை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூரைச் சேர்ந்த விவசாயி சத்னம் தனது 4 1/2 ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்தார். விளைப் பொருட்களுக்கு ஏற்ற விலைக் கிடைக்க வில்லைமேலும் நிலத்தில் பயிரிட்ட முதலுக்கும் வழியில்லாத விரக்தியில் விவசாமி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

லாபம் ஈட்ட முடியாததால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த சத்னம் தனது 4அரை ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களையெல்லாம் டிராக்டரை கொண்டு அழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி விவசாயி நிலத்தில் டிராக்டை கொண்டு அழித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

author avatar
kavitha