தலைமை செயலர் பதவிக்காலம் நீட்டிப்பு.! தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு.!

தலைமை செயலர் சண்முகம் அவர்களின் பதவிக்காலத்தை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு. 

தமிழகத்தின் தலைமை செயலராக தற்போது சண்முகம் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மதம் நிறைவடைய உள்ளது. தற்போது, இவரது பதவிகாலத்தை நீடிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. 

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தலைமை செயலர் சண்முகத்தின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையில் 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலத்தை  மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.