36 மணிநேரத்தில் 8 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ! பீதியில் கலிபோர்னியா மக்கள்!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 8 முறை  தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தில் இருக்கும் மக்கள் வீடுகளை இழந்து கடும் பீதியில் இருக்கின்றனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றும் அதற்கு முன்தினமும் பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் முதல் சான் டியாகோ வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.நிலத்தின் அடியில் செல்லும் எரிவாயு குழாய்கள் கசிவு ஏற்பட்டு வீடுகளில் பரவியுள்ளது.வீடுகளில்

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செய்தி வசித்து கொண்டிருந்த சாரா டான்சே எனும் செய்தியாளர், செய்தி வாசித்து கொண்டிருக்கும் போது  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பயந்து மேசைக்கு அடியில் ஒளிந்துள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது.