தோனியின் புதிய தோற்றத்தை வெளியிட்ட சிஎஸ் கே.! தீயாக பரவும் புகைப்படம்.!

  • 13 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 29-ம் தேதி தொடங்கவுள்ளது.
  • தோனிபுதிய தோற்றத்த்தில்  “ஆட முடியுமா” என்ற வார்த்தைகள் இருக்கும் வீடியோ கேம் விளையாடுவது போன்ற இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே வெளியிட்டது.

13 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற உள்ளது. இப்போட்டி அடுத்த மாதம் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் வழக்கம்போல 8 அணிகள் விளையாடுகின்றனர். இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அட்டவணை வெளியானதும் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஏனென்றால் முதல் போட்டியில் சென்னை அணியும் ,அணியும் மோதுகின்றது .இப்போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை கேப்டன் தோனி வருகின்ற 01-ம் தேதி  சென்னையில் வந்து பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில்   தோனியின் புதிய தோற்றத்துடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அந்த புகைப்படத்தில் தோனி “ஆட முடியுமா” என்ற வார்த்தைகள் இருக்கும் வீடியோ கேம் விளையாடுவது போன்ற இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன்பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாட இதனால் சமூகவலைத்தளங்களில்  தோனி ஓய்வு பெறுவார் என்ற என்று செய்தி வலம் வந்தது. பின்னர் பிசிசிஐ அறிவித்த  வீரர்களின் பட்டியலில் தோனி என் பெயர் இடம்பெறவில்லை. இதனால் தோனியின் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இதையெடுத்து இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தோனி  விளையாடுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

author avatar
Dinasuvadu desk