இன்னும் 2 மாதங்கள் விடுப்பை நீட்டிய தல தோனி..!

உலகக்கோப்பை  தொடங்குவதற்கு முன்னே தோனியின் ஓய்வு பற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. உலகக்கோப்பைக்கு பின்னர் 20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் தோனிக்கு வாய்ப்பில்லை என பிசிசிஐ அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து  வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அப்போது  ராணுவத்தில் இணைந்து பணியாற்ற போவதாக கூறி தோனி இரண்டு மாதங்கள் விடுப்பு அறிவித்தார்.பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 போட்டிகளில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

அடுத்ததாக பங்களாதேஷ் அணி எதிரான தொடர் வரவுள்ளது. இந்நிலையில் தோனி  தன்னுடைய விடுப்பை  நவம்பர் மாதம் வரை நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பங்களாதேஷ் அணியுடன் டி-20 போட்டிகளில் தோன விளையாட மாட்டார் எனவும் , டிசம்பர் மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான தொடரில்  தோனி விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan