கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 121 பேர் உயிரிழப்பு

கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் மேற்கு பருவ மழை  கேரளாவில் தீவிரமாக பெய்து வந்தது .இதனால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது .கடந்த 8 தேதி முதல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது.

Image

இந்த நிலையில் கேரள அரசு வெள்ள நிலவரம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி  தற்போது  வெள்ளத்தில் சிக்கிய 21 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர் .ராணுவம், விமானப்படை, கடற்படை என  அனைத்து படைகளும் தேடும்  பணி மற்றும்  மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனது.கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.