ஊரடங்கு உத்தரவு : 250 குடும்பங்களுக்கு உதவிய பிரபல நடிகர்!

இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், ஏழை, எளிய மக்கள் அன்றாடம் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் சாய் தீனா ஊரடங்கால் அவதியுறும் 250 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, சாம்பார் பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார். மேலும், சென்னையில் தேசியநகர் பகுதியில் வாழும் மக்களுக்கு வேண்டும் உதவிகளை வழங்க தயாராகஉள்ளதாக கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.