தண்டவாளத்தில் விரிசல் ..! ஊழியர் கொடுத்த தகவலால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது ..!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ரயில் நிலையத்தில் வேலை செய்து வருபவர் ரயில் ஊழியர் ஜெயவேல். இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று உள்ளார். அப்போது சோளிங்கர் நிலையத்திலிருந்து மகேந்திரவாடி இருந்து நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்த  ஜெயவேல் உடனடியாக சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலை தொடந்து ஜோலார்பேட்டையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள விரிசலை சரி செய்தனர். இந்த விரிசல் காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில்கள் சுமார் ஒரு மணிநேரம் தாமதமானது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

author avatar
murugan