மகாராஷ்டிராவில் 2.12 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 5368 பேருக்கு தொற்று உறுதி!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,368 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,11,987 ஆக உயர்வு.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்புஅதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இன்று ஒரே நாளில் 5,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,11,987 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 204 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,026 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,522 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,15,262 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 87,681 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.