டெல்லியில் கொரோனா பாதிப்பு 94,000-ஐ கடந்தது..ஒரே நாளில் 2,520 பேர் கொரோனா.!

டெல்லியில் ஒரே நாளில் 2,520 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94,000 ஆக அதிகரித்துள்ளது.

 டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 94,000 ஆக அரிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை  65,624 ஆக அதிகரித்துள்ளது. மேலும்   உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,923  ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 26,148 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.