கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா “நெகட்டிவ்”!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லையென உறுதியானது.

சமீபத்தில், கோழிக்கோடில் நடந்த விமான விபத்தில் சிக்கி, 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த இடத்தை கேரள முதல்வர் பினராய் விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்தநிலையில், கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து கேரள முதல்வர் பினராய் விஜயன், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லையென தெரியவந்துள்ளது.