வறண்டது புழல்….குடிநீர் எடுக்கும் பணி நிறுத்தம்..! தவிக்க போகிறதா..? தலைநகரம்

புழல் ஏரி முற்றிலும் வறண்டதால் குடிநீர் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த புழல் ஏரி முற்றிலும் வறண்டு காணப்படுவதால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று புழல் ஏரியில் இருந்து 6 கன அடி தண்ணீர் உறிஞ்சப்பட்டு வந்த நிலையில் ஏரி முற்றிலும் வற்றியதால் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னைக்கு நீர் ஆதரமாக இருந்து வரும் செம்பரபாக்கம்,சோழவரம் ஏரியும் ஏற்கனவே வறண்ட நிலையில் தற்போது வரை நம்பிக்கை தந்து கொண்டிருந்த புழல் ஏரியும் வற்றி வறண்டு உள்ளது.
இந்நிலையில் புழலில் இருந்து சென்னைக்கு ஓரளவு குடிநீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது முற்றிலும் தடைபடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.இதனால் தலைநகருக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

author avatar
kavitha