#BREAKING: மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி புதியதாக விண்ணப்பிக்க -உயர்நீதிமன்றம் உத்தரவு ..!

சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி புதியதாக  விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க  வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதியதாக உரிமம் கோரும்  விண்ணப்பங்கள் மீது 15 நாட்களில் தமிழக அரசு முடிவெடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.மேலும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரின் அளவை மார்ச் 30-ம் தேதி கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையெடுத்து சட்டவிரோதமாக குடிநீர் ஆலைகள் இயங்குகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ரீதியாக இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் எனவும் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் ஆலைகள் ரூ .50,000 வைப்பு தொகை செலுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

author avatar
murugan