17 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..சென்னை வானிலை ஆய்வு மையம்.!

5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்குலேசான மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  சேலம் , விழுப்புரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை போன்ற 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்று என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஆனால் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தர்மபுரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் புதுவை பகுதிகளில் மிதமான மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.