கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும்- முதல்வர் பழனிசாமி கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்  பழனிசாமியுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த ஆலோசனையில் செயற்கை சுவாச கருவிகள், என்.95 மாஸ்கள் வாங்க ஏற்கனவே தமிழக அரசு கோரியுள்ள 9 ஆயிரம் கோடியோடு சேர்த்து கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவேண்டும் என்று  பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கோரிய ₹9000 கோடியும் உடனே வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வலியிறுத்தியுள்ளார்.