நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய வழக்கு :தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய வழக்கின்  தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

மாணவியை தவறாக வழிநடத்துவதாக கைது செய்யப்பட்டார் பேராசிரியை நிர்மலாதேவி.பின்  பதினொரு மாத விசாரணைக்கு பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.சிபிசிஐடி இந்த வழக்கை ஏற்று விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில்  கல்லூரி மாணவிகளை தவறான  பாதைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி-யில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு ஓன்று  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,  நிர்மலா தேவி விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.