புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடியுமா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடியுமா?

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்கள், மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடியுமா ? என மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், வெள்ளி மாநில தொழிலாளர்களுக்கு தங்க இடம், உணவு, நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.