BREAKING: தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு நாளை விடுமுறை ..!

இன்று தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாளை ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை , காஞ்சிபுரம் ,விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தூத்துக்குடி , நெல்லை, வேலூர் ,திருவண்ணாமலை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி அறிவித்தார்.

இந்நிலையில்  தொடர் மழையால்  நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

author avatar
murugan