சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் – ஆந்திரா முதல்வர்!

சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் என ஆந்திரா முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரஜா சங்கல்ப் யாத்திரை எனும் 3600 கி.மீ யாத்திரையை மேற்கொள்வதுண்டு. இந்த யாத்திரையின்  போது சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தருவது தனது வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது எனவும், விரைவில் அமைத்து கொடுக்க அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு  ஆணையர் தும்மா விஜய் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த போர்வெல் அமைக்கும் திட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் கிராம செயலகங்கள் அல்லது ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு தகுதியின் அடிப்படையிலும், நிலத்தின் நீர் அளவுகோல் சாத்தியக்கூறு மற்றும் துளையிலிடும் இடம் ஆகியவற்றை கணக்கிட்டு அதன் பின்பு அமைத்து தரப்படும் எனவும் தகவல் தொடர்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal