கதிராமங்கலத்தில் விஜயகாந்த் அதிரடி பேச்சு!!!

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் தே.மு.தி.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரேமலதா முன்னிலை வகித்தார்.இதில், பங்கேற்ற விஜயகாந்த் பேசியதாவது: கதிராமங்கலத்தில் மக்கள் எதிர்க்கும் இந்த திட்டம், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. வேலை கிடைக்கும் என நம்பி, நிலத்தை கொடுத்தவர்களுக்கு, ஓ.என்.ஜி.சி.,யில் வேலை கொடுக்கவில்லை.தமிழகத்தில் மக்கள் எதிர்க்கும் இது போன்ற திட்டங்கள், தி.மு.க.,- அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. போராடும் போது, போலீசை வைத்து அடக்க நினைக்க கூடாது,மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அரசு இருக்க வேண்டும் என்று கூறினார்.

author avatar
Castro Murugan

Leave a Comment