இலங்கை அணியை ஓய்ட் வாஷ் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி ..!

இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டியில் விளையாடி வந்தனர். முதலில் நடைபெற்ற 2  டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி சிட்னியில் உள்ள நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 226 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக  அலிஸா ஹீலி148 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத்தொடர்ந்து 227 ரன் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடர்ந்து ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து வெறும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதில் அதிகபட்சமாக சமாரி 31 ரன்கள் எடுத்தார்.ஆஸ்திரேலிய அணி நிக்கோலா கேரி 3 விக்கெட்டை பறித்தார். இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை ஓய்ட் வாஷ் செய்தது.

author avatar
murugan