சங்க தேர்தலுக்கு சைக்களில் வந்து வாக்களித்து அசத்திய ஆர்யா.!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது.
நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் -நடிகர் -இயக்குநர் பாக்கிய ராஜ் தலையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.நேற்று சென்னை உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகோடு தேர்தல் நடத்த அனுமதி வழங்கியதை தொடந்து இன்று தேர்தல் நடைபெறுகிறது.தற்பொழுது வரை 1470 வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்தார்.அதன் பின் வாக்களித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நடிகர் சங்க தேர்தலை தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

author avatar
kavitha