#TNBudget2020 : கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கீடு

கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க ரூ.75 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.அவரது உரையில், கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20 ம் ஆண்டில் ரூ.68.35 கோடி நிதி அள்ளிக்கப்பட்டது. 2020-21 ம் ஆண்டில் ரூ.75 கோடி கூடுதல் நிதியுதவியுடன் அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்  என்று துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.