மும்பையில் நடிகர் அமிதா பச்சன் வீட்டின் முன்பு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் !

மும்பையில் உள்ள ஆரோகாலனியில் 3 வது மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் பணிமனை அமைக்க முடிவு செய்யபடத்தை அடுத்து இதற்காக அங்கிருந்த 2700 மரங்கள் வெட்ட பட்டது. இதனை பல் சினிமா பிரபலங்களும் ,சமூக ஆர்வலர்களும் கண்டித்தார்கள்.

இந்நிலையில் இந்த மெட்ரோ ரயில்  பணிமனை அமைப்பது குறித்து நடிகர் அமிதா பச்சன் ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்திருந்தார்.இதனால் திடீரென நேற்று பிற்பகல் 3 மணியளவில் கல்லூரி மாண்வர்கள் மும்பை ஜூகுவில் உள்ள  அமிதா பச்சன் வீட்டின் முன்பு போராட்டம்  நடத்தினார்கள். மேலும் பல கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.மேலும் இந்த போராட்டத்தை அறிந்து போலீசார் அந்த இடத்திற்கு விரைந்தனர்.பின்பு அங்கிருந்து மாணவர்களை அப்புற படுத்தினார்கள்.