லோக் சபா மற்றும் இடைத் தேர்தல்: நாளை காலை அதிமுக வேட்புமனுதாக்கல்

  • வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்கான வேட்புமனுத் தாக்கலை அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை 11.30 முதல் 12 வரை செய்கின்றனர்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் பதினெட்டு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக இந்த இரண்டு தேர்தலும் நடத்தி முடிக்கப்படுகிறது.

பல்வேறு கட்ட குழப்பங்களுக்கும், கூச்சல்களுக்கும் பின்னர் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதிமுக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் நாளை காலை 11.30 முதல் 12 வரை தத்தம் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த அறிக்கையை அதிமுக தலைவர்கள் இன்று அறிவித்துள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment