ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ போர் விமானம்.! ஒப்பந்தத்தை முடிவு செய்தது ஹெச்ஏஎல் நிறுவனம்.!

  • பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.39,000 கோடி மதிப்பில் 83 தேஜஸ் போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் வகையில் நவீன கருவிகள் மற்றும் போர் விமானங்களை வாங்குவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ஒற்றை எஞ்சின் கொண்ட 83 தேஜாஸ் மார்க்1ஏ (Tejas Mark-1A) ஜெட் விமானங்களை ரூ.49,797 கோடி கொள்முதல் செய்ய கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில், பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து அதை தயாரித்து வழங்க வேண்டிய (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) ஹெச்ஏஎல் நிறுவனம் ரூ.56,500 கோடி என குறிப்பிட்டு ஒப்பந்தத்தை கூறியது. இந்த விலை வேறுபாடு காரணமாக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பின்னர் ரூ.17,000 கோடி குறைக்கப்பட்டு, ரூ.39,000 கோடிக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை தயாரித்து வழங்குவது என ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது உள்நாட்டு அளவில் போர் விமானங்கள் தொடர்பான மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்