பாய்லர் வெடித்ததில் பாகிஸ்தானில் 4 பேர் பலி..!

பாகிஸ்தானில் உள்ள கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை ஓன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அங்கு இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த தீ விபத்தில் சிக்கி  9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மீதம் இருந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் தொழிற்சாலையின் மற்ற பிரிவுகளில் வேலையில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள் தப்பினர்.

author avatar
Dinasuvadu desk