300 அடி செல்போன் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை….!!

ஆரணியில் குடும்பத்தகராறு காரணமாக 300 அடி செல்போன் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏத்துவாபட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ்.இந்நிலையில் ரமேஷுக்கும் அவரது மனைவிக்குமிடையே  தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில்ரமேஷ் அந்த ஊரில் உள்ள 300 அடி செல்போன் கோபுரத்தில் ஏறிய ரமேஷ் கீழே விழுந்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து ரமேஷின் உறவினர்கள் காவல்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்குவதாக இல்லை.சுமார் 5 மணி நேரம் இதே நிலை நீடித்தால் நீடித்த சூழலில் தீயணைப்பு துறையை சேர்ந்த 3 பேர் செல்போன் கோபுரம் மீது ஏறினர்.அப்போது அவர்களை ரமேஷை நெருங்கி வரும் நேரத்தில் அவர் திடீரென கீழே குதித்தார் இதனால் மின்கம்பியில் சிக்கி தலை சிதறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment