திருப்பூரில் அதிகாலை லாரி- பேருந்து மோதி கோரவிபத்து.! 19 பேர் பலி.!

  • அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும் –  கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் மோதிக்கொண்டது.
  • இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கேரள மாநில அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது கோவையிலிருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும் – பேருந்தும் மோதிக்கொண்டது.இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

author avatar
Dinasuvadu desk