19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில்பங்கேற்றுள்ள மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 வருடத்தில், இதுவரை19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில்பங்கேற்றுள்ளதால், அவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

2014-ஆம் வருடம் மே மாதம் பிரதமராக பதவியேற்ற, பிரதமர் நரேந்திர மோடி இன்று வரை 19 நாட்கள் மட்டுமே நாளுமன்றத்திக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குதொடங்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

 

அவர் தனது மனுவில், பிரதமர் நரேந்திர மோடி தனது 4 ஆண்டுகால ஆட்சியில் வெறும் `19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பதாக கூறியுள்ளார். அப்படி அவர் பங்கேற்றாலும் பெரும்பாலான நேரங்களில் பேசியதில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் முக்கிய பிரச்சனையான விலைவாசிஉயர்வு, ஜிஎஸ்டி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற விஷயங்களின் போதும் மோடி விவாதிக்கவில்லை என்றும் அவர் எப்போதும் அமைதி காத்து வந்ததாகவும் மனுதாரர்கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment