160 கி.மீ வேகத்தில் சாலையிலும்,180 கி.மீ வேகத்தில் வானிலும் செல்லும் பறக்கும் கார்.! விரைவில் இந்தியாவில் அறிமுகம்.!

நெதர்லாந் நாட்டை தலைமை இடமாக கொண்டு, பறக்கும் கார் தயாரிக்கும் PAL V என்ற நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுவும்  வரும் 2021ம் ஆண்டிலிருந்து குஜராத்தில் தனது தயாரிப்பை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் குஜராத் மாநிலத்தின் முதன்மைச் செயலாளரான எம்.கே தாஸ் மற்றும் PAL-V நிறுவனத்தின் சர்வதேச வணிக மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான கார்லோ மாஸ்போம்ல் ஆகியோரிடையே கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது 110 பறக்கும் கார்கள் ஏற்றுமதிக்கான ஆடர்களை ஏற்கெனவே பெற்றுள்ளதாகவும், இந்த காரில் 2 என்ஜின்களைக் கொண்டு, மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சாலையிலும், 180 கி.மீ வேகத்தில் வானிலும் பறக்கும் திறனில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் சென்று கொண்டிருக்கும்போது 3 நிமிடங்களில் பறக்க தயாராகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்