மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு….மாட்டின் உரிமையாளரை முட்டித்தள்ளிய காளை.!5 பேர் காயம்

  • கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாள் மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழா. 
  • காயமடைந்தோர் 5 பேர் -இருவர் மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைப்பு.

தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது.

இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியினை கண்டுகளிக்கும் விதமாகவும் பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.வாடிவாசலில்  சீறிப்பாய  700 காளைகள் திமிளை காட்டிவாறு நிற்கின்றன இந்த காளைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் அவர்களின் தலைமையிலான குழுவானது இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் காயங்களும் சில மாடுபிடிவீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு களத்திற்கு வெளியே சென்ற தன் மாட்டை பிடிக்க முயன்ற அந்த மாட்டின் உரிமையாளர் விக்னேஷ் மீது மற்றொரு மாடு முட்டியதன் விளைவாக காயமடைந்தார். மேலும் மாடு முட்டியதன் விளைவாக சில வீரர்கள் காயமடைந்தனர் அதனடி விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்து சிகிச்சை அளிப்பட்டுள்ளது.மேலும் இருவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
kavitha