நடிகை சரிதா நாயர் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு எதிராக கூறிய கருத்துகளை நிராகரித்தது கேரள உயர்நீதிமன்றம்!

கேரள உயர்நீதிமன்றம்,கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு எதிராக நடிகை சரிதா நாயர் கூறிய கருத்துகளை  நிராகரித்துள்ளது. சோலார் பேனல் முறைகேடு வழக்கில் கைதான அவர், நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் உம்மன் சாண்டிக்கு எதிராக பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த உம்மன் சாண்டி, விசாரணைக் கமிஷனின் அறிக்கையில் தமது பெயரை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கையில் இருந்து அடிப்படை ஆதாரம் இல்லாத சரிதா நாயரின் புகார்கள் மற்றும் கருத்துகளை நீக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment