சர்வாதிகாரத்துடன் இந்தியா எப்போதும் நடந்து கொண்டதில்லை!பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திரமோடி ,இந்தியா எப்போதும் சர்வாதிகாரத்துடன் நடந்து கொண்டதில்லை என தெரிவித்துள்ளார்.

புத்தர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புத்தரின் போதனைகள் 21 ஆம் நூற்றாண்டுக்கும் ஏற்றவையாக உள்ளது என்றார். எந்த ஒரு நாட்டின் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியதில்லை என்பதற்கு நமது வரலாறு, பண்பாடு, பாரம்பரியமே ஆதாரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய மதங்கள் அனைவருக்குமானவை என்று கூறிய பிரதமர், மதத்தில் இணையுமாறு யாரையும் அவை கட்டாயப்படுத்துவதில்லை என்றார். இந்திய மத கொள்கைகள் அன்பு, அமைதி மற்றும் சகிப்புத்தன்மை கொண்டதாகவும் இருப்பதாக குறிப்பிட்ட மோடி, அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துக்களையும்  தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment