கூட்டுறவு சங்க விவகாரம் – தடை நீட்டிப்பு ;உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக கூறிய திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் 3,4 மற்றும் 5 ஆம் கட்ட தேர்தல்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது. ஆனால் தேர்ல் முடிவுகளை வெளியிட மட்டும் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை அன்று விசாரணை வந்த போது முடிவுகளை வெளியிட வருகிற 7-ஆம் வரை தடையை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்…