குளம் போல் காட்சியளிக்கும் கோவிலூர் சாலை

திண்டுக்கல் குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் வழியில் கோவிலூர் சாலை மழைநீரால் குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமபடுகின்றனர். அந்த பகுதி வார்டு கவுன்சிலர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை அனைத்து அரசு அதிகாரிகளும் இந்த சாலை வழியாகவே பயணிக்கின்றனர். இருப்பினும்  இந்த சாலையை சீரமைக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. சொகுசு கார்களில் வருவதாலோ என்னவோ இந்த பிரச்சனை அவர்களுக்கு புரியவில்லை என தெரிகிறது. எப்போது இந்த பகுதி சாலை  பிரச்சனை தீரப்போகுதோ தெரியவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment