கும்மிடிபூண்டி அருகே விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு டேங்கர் லாரி: 2-வது நாளாக எரிவாயு நிரப்பும் பணி தீவிரம்…!!

கும்மிடிபூண்டி அருகே விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து, இரண்டாவது நாளாக குழாய் மூலம் எரிவாயுவை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி நேற்று விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிந்து வெளியேறியதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் அருகில் செல்லாதவாறு தீயணைப்பு துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து,மாற்று டேங்கர் லாரிகளுக்கு குழாய் மூலம் எரிவாயுவை நிரப்பும் பணியில், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment