காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள , கார் இருக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
சாத்தமை கிராமத்தில் இயங்கும் பார்க் ஆலையில் இருந்து, வெளிநாடுகளுக்கு கார் இருக்கைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆலையில், கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
பின்னர், ஒரு மணிநேரமாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.