ஊழலில் தண்டனை பெற்ற இரண்டு ரெட்டிகள், ஒரு எடியூரப்பா என்பது தான் மோடியின் தேர்தல் வியூகமா!மோடிக்கு சித்தராமய்யா பதிலடி

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமய்யா,கர்நாடக மாநில தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகளுக்கு  பதிலடி கொடுத்துள்ளார்.

சித்தராமய்யா தோல்வி பயத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், அவரது மகனும் தேர்தலில் களம் கண்டு உள்ளது வாரிசு அரசியலின் நீட்சி என்றும் மோடி தமது பிரசார உரையில் தாக்குதல் தொடுத்தார். நாடாளுமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் மோடி போட்டியிட்டதும் தோல்வி பயத்தாலா என தமது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமய்யா பதிலடி கொடுத்துள்ளார். அத்தோடு, சுரங்க ஊழலில் தண்டனை பெற்ற இரண்டு ரெட்டிகள், ஒரு எடியூரப்பா என்பது தான் மோடியின் தேர்தல் வியூகமா என்றும் சித்தராமய்யா கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment