இளம் ஜோடியை மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்தில் தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
நேற்று மாலை மெட்ரோ ரயிலில் பயணித்த ஜோடி ஒன்று, அநாகரீகமாக நடந்து கொண்டதாக டம் டம் ரயில் நிலையத்தில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டது.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், இளம் ஜோடியை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இளைஞர்கள் திரண்டு டம் டம் மெட்ரோ நிலையத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெருக்கமாக நிற்பதில் என்ன தவறு உள்ளது? என்று முழக்கமிட்டு போராடிய அவர்கள், காவல்துறையும் இதற்கு உடந்தை என்று குற்றம்சாட்டினர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மெட்ரோ நிர்வாகம், தற்போது வரை புகார் பதிவாகததால் விசாரணையில் சிக்கல் நீடிப்பதாக கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.