துபாயில் ஒருவர், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசியுள்ளார். இதனை வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, இவர் பதிவிட்ட இந்த வீடியோ குறித்து துபாய் காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
இதனையடுத்து, அந்த வீடியோவை வெளியிட்ட நபரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துபாய் காவல்துறையின் இயக்குனர் ஃபைசல் குவாஸிம் இதுகுறித்து கூறுகையில், துபாய் பணத்தை சாலையில் தூக்கி வீசிய நபரை தேடி வந்தோம். அவரை கண்டுபிடித்து தற்போது கைது செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அந்த நபரை விசாரித்த போது, அவர் தன்னை அதிக பேர் பின்தொடர வேண்டும் என்பதற்காகவே பணத்தை சாலையில் வீசியதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
துபாய் அரசின் சட்டப்படி, இவ்வாறு நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை அளிக்கப்படும்.
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…